Monday 20th of May 2024 04:58:20 PM GMT

LANGUAGE - TAMIL
-
டெங்கு தாக்கம் அதிகரித்து வருவதால் மையவாடி மக்களால் சிரமதானம்!

டெங்கு தாக்கம் அதிகரித்து வருவதால் மையவாடி மக்களால் சிரமதானம்!


ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மையவாடி துப்பரவு செய்யும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.

மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் பள்ளிவாயலின் தலைவர் ஏ.எல்.அலியார் தலைமையில் பள்ளிவாயல் மையவாடி பிரதேச பொதுமக்களின் பங்களிப்புடன் துப்பரவு செய்யப்பட்டது.

கடந்த காலங்களில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுப்போன சமூக இடைவெளி தொடர்பான சுகாதாரப் பிரச்சினையின் காரணமாக பராமரிப்பது சிரமம் காணப்பட்டதை தொடர்ந்து பள்ளிவாயலின் தலைவரின் ஆலோசனைக்கமைய மாதத்திற்கு இரண்டு நாட்கள் ஊர் மக்களினால் சிரமதானப் பணியினை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக வரும் மக்களின் பாதுகாப்பு கருதியும், பிரதேசத்தின் பாதுகாப்பு கருதியும் மையவாடி துப்பரவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE